பக்கங்கள் செல்ல

Friday, April 17, 2015

அர்த்தமுள்ள கேள்விகள் - 07 - மறு பிறவி உண்டா?

ஒரு மணி நேர மந்திரத்தில் மறுபிறவி’ பார்க்கணுமா?
தாய்லாந்தில் நடைபெறும் ‘மறுபிறவி மந்திர நடைமுறை’ இது. ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட ஒரு தினத்தில் இது பெரியஅளவில் நடைபெறுகிறது.
“முற்பிறவியில் செய்த பாவம், இந்தப் பிறவியில் கஷ்டங்களை ஏற்படுத்தும். அதிலிருந்து விடுதலையாக வேண்டுமானால், இப் பிறவியில் சில நல்ல காரியங்களை செய்துவிட்டு, இந்த சடங்கில் கலந்து கொள்ள வேண்டும்." இது புத்த மதத்தில், உள்ள கோட்பாடு என்று அங்குள்ள துறவிகள் விளக்கம் கொடுக்கிறார்கள். [
நன்றி:விறுவிறுப்பு]
இதை அவர்களின் மத நம்பிக்கை என்று விட்டு விடலாம் ஆனால் இது பகுத்தறிவு பூர்வமாக சாத்தியமா எனபதை பார்ப்போம்:

"மறு பிறவி உண்டா?" என்ற கேள்விக்கு, சகோதரர் P.ஜைனுல் ஆப்தீன் அவர்களின் பதிலை "அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுப்பூர்வமான பதில்கள்" எனும் நூலில் இருந்து தருகின்றோம்.


மறு பிறவி என்பது கற்பனையே தவிர வேறில்லை என்பதைச் சிரமமின்றி  நிரூபித்து விடலாம்அதற்கு முன்னால் மறு பிறவி என்பது என்ன என்பதை  அறிந்து கொள்ள   வேண்டும்.
மனிதர்கள் இன்று நல்ல வாழ்வைப் பெற்றிருந்தாலும் மோசமான வாழ்வைப்பெற்றிருந்தாலும் அதற்குக் காரணம் முந்தைய பிறவியில் அவர்கள் செய்த  வினை தான்.இந்தப் பிறவியில் ஒருவன் நல்லவனாக வாழ்ந்தால் அடுத்த பிறவியில் சகலஇன்பங்களையும் பெற்று வாழ்வான்.

இப்படி ஏழு ஜென்மங்களை எடுப்பதாகக் கூறுகின்றனர்மனிதனோடு மட்டும் இதைநிறுத்திக் கொள்வதில்லைமற்ற உயிரினங்கள் வரை விரிவு படுத்துகின்றனர்நாம் ஒரு நாயைச் சித்திரவதை செய்தால் அடுத்த பிறவியில் நாம் நாயாகவும் நாய் மனிதனாகவும் பிறப்பெடுப்போம்அப்போது மனிதனாகப் பிறப்பெடுத்த நாய்நாயாகப்பிறப்பெடுத்த நம்மை அதே போன்று சித்திரவதை செய்யும்   என்றெல்லாம் உபன்னியாசங்களில் நாம் கேட்டுள்ளோம்.
இதைக் கவனத்தில் வைத்துக் கொண்டு இன்னொரு அடிப்படை உண்மையைக்கவனியுங்கள்.
இன்றைக்கு உலகில் 600 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்நூறுவருடங்களுக்கு முன்னால் இதில் கால்வாசி அளவுக்குத் தான் மக்கள் தொகை இருந்தது.இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னே மேலும் முன்னே  சென்று கொண்டேஇருந்தால் மனிதர்கள் சில ஆயிரம் பேர் தான் இருந்திருப்பார்கள்இன்னும் முன்னேறிச்சென்றால் ஒரே ஒரு ஜோடியில் போய் முடிவடையும்.
மனிதன் மட்டுமின்றி ஏனைய உயிரினங்களை எடுத்துக் கொண்டாலும் பல்லாயிரம்ஆண்டுகளுக்கு முன்னே சென்று கொண்டே இருந்தால் ஒவ்வொரு உயிரினமும் ஒருஜோடியில் போய் முடியும்.


அனைத்து உயிரினங்களும் ஒரே ஒரு ஜோடியிருந்து தான் பல்கிப் பெருகின.  மனிதனையும் சேர்த்து எத்தனை வகை உயிரினங்கள் உலகில் உள்ளன என்று நம்மிடம்கணக்கு இல்லைஉதாரணத்துக்காக ஐம்பது லட்சம் வகை உயிரினங்கள் இருப்பதாகவைத்துக் கொள்வோம்ஒவ்வொரு வகை உயிரினத்திற்கும் ஒரு ஜோடி என்று வைத்துக்கொண்டால் ஐம்பது லட்சம் ஜோடிகள் அதாவது  ஒரு கோடி உயிரினங்கள்இருந்திருக்கும்.

மறு பிறவி என்று ஒன்று இருந்தால் இந்த எண்ணிக்கை அதிகமாகக் கூடாதுஇந்த ஒருகோடி உயிரினங்கள் தான் அடுத்த ஜென்மத்திலும் இருக்க  வேண்டும்வேண்டுமானால்ஆடு மனிதனாகமனிதன் ஆடாக பிறப்பெடுக்கலாமே தவிரஒரு கோடியை விடஅதிகமாகவே கூடாதுஒரு கோடியாக இருந்த உயிரினங்கள் இரண்டு கோடியாகபெருகினால் அதற்குப் பெயர் மறுபிறவி  அல்லபுதிய உயிர்களின் உற்பத்தி என்றே கூறவேண்டும்.

பாரதியார் முப்பது கோடி முகமுடையாள் என்று பாடினார்அப்போது இந்தியாவில்முப்பது கோடி மக்கள் இருந்தனர்அவர்கள் மறு பிறவி எடுத்தால் இப்போதும் முப்பதுகோடி தான் இருக்க வேண்டும்.70  கோடிப் பேர் அதிகமாகியுள்ளோம்நாம் மட்டும்அதிகமாகவில்லைஅனைத்து உயிரினங்களும் அதிகமாகியுள்ளன.

புதுப் புதுப் பிறவிகள் உற்பத்தியானால் மட்டுமே இது சாத்தியமாகுமே தவிரபழையவர்களே மீண்டும் பிறந்தால் இப்படி தாறுமாறாகப் பெருகக் கூடாது.   பெருகமுடியாதுமறு பிறவி இல்லை என்பதற்கு இதை விட வேறு எந்தச்   சான்றும்தேவையில்லை.
அதற்குச் சொல்லப்படுகின்ற தத்துவமும் ஏற்புடையதாக இல்லைஏற்கனவே செய்தபிறவிப் பயனையே இப்போது அனுபவிக்கிறோம் என்பதற்கு இவர்கள்  கூறும் தத்துவம்என்ன?
இவ்வுலகில் நாம் கெட்ட காரியம் செய்தால் அடுத்த பிறவியில் அனுபவிப்போம் என்றுகூறினால் மனிதன் நல்லவனாக வாழ்வான் என்பது தான்    தத்துவம்.
ஒருவருக்குத் தண்டனை கொடுப்பதாக இருந்தால் இன்ன குற்றத்துக்காக இந்தத்தண்டனை வழங்கப்படுகிறது என்று அவருக்குத் தெரிய வேண்டும்அது தான்தண்டனைபரிசு கொடுப்பதாக இருந்தாலும்   எந்தச் செயலுக்காக அந்தப் பரிசு கிடைத்ததுஎன்பதை அவர் உணர வேண்டும்.

அவ்வாறு இல்லாவிட்டால் பரிசுகளாலோதண்டனைகளாலோ எந்தப் பயனும் ஏற்படாதுஇந்தப் பிறவியில் துன்பம் அனுபவிக்கும் யாருக்காவது நாம் இதற்கு முன் எந்தப்பிறவியில் இருந்தோம் என்பது தெரியுமாநிச்சயம் தெரியாதுஎன்ன பாவம்செய்ததற்காக இந்த நிலையை அடைந்தோம் என்று தெரியுமாஅதுவும் தெரியாது.அப்படியானால் அவன் அடுத்த பிறவியைப் பற்றிக் கவலைப்பட்டு எப்படி நல்லவனாகவாழ்வான்?

ஒருவன் கொலை செய்து விடுகிறான்அக்குற்றம் நிரூபிக்கப்பட்டு விடுகிறதுஆனால்கொலை செய்தவனுக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது என்று வைத்துக் கொள்வோம்.இந்த நிலையில் அவனுக்குத் தூக்குத் தண்டனை வழங்க   மாட்டார்கள்அவனேஉணராமல் அவனைத் தண்டிப்பது தண்டனையாகாதுஅதில் பயனும் இருக்காது என்றுஉலக அறிஞர்களின் ஒருமித்த அறிவு   இவ்வாறு தீர்ப்பளிக்கிறது.

அனைவரையும் படைத்த கடவுளுக்கு இந்த அறிவு கூட இருக்காதாநான் என்னசெய்தேன் என்பது எனக்கே தெரியாமல் இருக்கும் போது என்னைத் 
தண்டிப்பது கடவுளின் தகுதிக்கும்நீதிக்கும் சரியாக இருக்குமா?
எனவே தத்துவ ரீதியாக விவாதித்தாலும் மறு பிறவி சரிப்பட்டு வரவில்லைகாரணகாரியத்தோடு அலசினாலும் சரிப்பட்டு வரவில்லை.
---------------------------------

Author's note:

ரிக் வேதத்தில், மறு பிறவி பற்றி உள்ளதா? - இல்லை என்கிறார், Dr. Koenraad Elst.
Ref: 



       














 

No comments:

Post a Comment